Showing posts with label காடு. Show all posts
Showing posts with label காடு. Show all posts

Wednesday, September 11, 2019

ஈஷா நிறுவனமும் அதன் சமூகப் பணியும்


மிகச்சிறந்த பல்வேறு சமூகப் பணிகள் ஈஷா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் நான் அறிந்த பாராட்டுதலுக்குரிய சில முயற்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிராம சுகாதார மருத்துவமனை
-  ஈஷாவின் நடமாடும் கிராம சுகாரதார மருத்துவமனையின் மூலம் 20 லட்சம் கிராம மக்களை சென்றடைந்துள்ளனர்  
- நாளொன்றுக்கு சுமார் 60க்கும் மேற்பட்டோர் நடமாடும் கிராம சுகாரதார மருத்துவமனையின் மூலம் பயன் பெறுகின்றனர்

- அரசின் உதவியுடன் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

இயற்கை பேரிடர் மீட்பு
- கடலூரில் சுனாமி தாக்கிய பகுதிகளில் பேரிடர் நிவாரண மீட்பு நடவடிக்கைகள், சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம் ஆகியவற்றிலும் பேரிடர் நிவாரண மீட்பு நடவடிக்கைகள், மற்றும் இன்னபிற

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்   
https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

கிராமப்புர மக்களுக்கான திட்டங்கள்
- கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதார உருவாக்கம்/ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்

- அழிந்து வரும் கிராமப்புர கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஈஷா கிராமோத்சவம்

- கிராமப்புர பகுதிகளில் இலவச யோகா வகுப்புகள்
- ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பலருக்கு இலவச வீடுகள் மற்றும் இன்னபிற…
இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும் https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

பழங்குடியின/மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள்

- பழங்குடியினத்தவரின் திறன் அடிப்படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சிகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல்

- ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின கிராமப்புர மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள்

- பல்வேறு பழங்குடியின  குழந்தைகளுக்கு இலவசக் கல்வி

- பழங்குடியின கிராமப்புர மக்களுக்கு இலவச வீடுகள் மற்றும் கழிப்பிடம் கட்டித்தருதல்

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும் 
bit.ly/IshaTribals

சுற்றுச்சூழலுக்கான திட்டங்கள்

- 30 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு,நடப்பட்டு, அதன் பராமரிப்பு குறித்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

- தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் மரக்கன்றுகள் பராமரிக்கும் 35 க்கும் மேற்பட்ட நர்சரிகள்


இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://www.ishaoutreach.org/en/project-greenhands

இந்திய நதிகளை மீட்க
- 2017 ல் ஈஷா நிறுவனத்தால் நடத்தப்பட்ட நதிகளை மீட்போம் பிரச்சார இயக்கம் இந்திய அளவில் மிக்பெரிய வெற்றியடைந்தது. இந்தியா முழுவதுமுள்ள 16,2 கோடி மக்கள் அந்த இயக்கத்திற்கு தங்கள் ஆதரவினை அளித்தனர்

-  நதிகளை மீட்போம் இயக்கம் அளித்துள்ள கொள்கை வரைவை மாநில நதிநீர் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. 

- இந்த இயக்கத்தின் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வாகரி நதியை மீட்போம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் அம்மாநில அரசின் உதவியுடன் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. 

- நதிகளை மீட்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக காவேரியின் கூக்குரல் என்ற செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  காவிரி நதிப்படுகைகளிலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அந்த நதிப்படுகையில் வேளாண்காடுகளை உருவாக்குது..

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்: 
cauverycalling.org

விவசாயிகளுக்கானத் திட்டங்கள்
- தமிழக விவசாயிகளுக்கு பன்னிரண்டிற்கும் மேற்பட்ட இலவச இயற்கை விவசாயப்
- மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் ஆயிரக்கணக்கான பள்ளி நிறுவனங்களை ஈடுபடுத்தியுள்ளது

இவை குறித்த மிகசமீபத்திய ஊடக செய்தி: 
வெள்ளியங்கிரியில் பதிவு செய்யப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் "Farmers Producers Organisation (FPO) கடந்த நிதியாண்டில் 7,91 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட 100 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.ஈஷா யோகா மையத்தின் வழிகாட்டுதலில் 2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வெள்ளியங்கிரிப் பகுதியிலுள்ள தொண்டியமுத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள தென்னை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கிறது. அந்த விவசாயிகள் பயிரிட்டு விற்பனை செய்யும் தேங்காய்களின் அளவை பொறுத்து விலை கொடுத்து அதனை விற்பனையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இது சந்தைவிலையைவிட குறைவு. 400 விவசாயிகளுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் தற்போது 1063 பேர் உறுப்பினர்களாகியுள்ளனர் என்று வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலுள்ள குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கும் இந்த விவசாயிகளை ஒருங்கிணைப்பதில் கிடைத்துள்ள இந்த வெற்றி மகத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விக்கான திட்டங்கள்
- தமிழகம் மற்றும் ஆந்திராவின் 8000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது
- 1000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த தரமான கல்வி அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://www.ishaoutreach.org/en/isha-vidhya

இந்திய செய்தி ஊடகங்கள் இத்தகைய நல்ல முயற்சிகளை/திட்டங்கள் குறித்து வெளியிடுவதில்லை. அதேநேரத்தில், ஈஷா நிறுவனம் குறித்து வரும் எந்தவொரு குற்றச்சாட்டையும் உடனே வெளியிடுகின்றன.

ஈஷா நிறுவனம் குறித்த உண்மையை தெரிந்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த கட்டுரையில் நாங்கள் அளித்துள்ள விவரங்களின் மூலம் உண்மையான விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Embed This

Tuesday, January 29, 2019

ஈஷா பவுண்டேஷன் வனஅழிப்பு செய்தது பொய் குற்றச்சாட்டு : கூகுள் எர்த் ப்ரோ மூலம் நிரூபணம்


கூகுள் எர்த் ப்ரோவைப் பயன்படுத்தி ஈஷா பவுண்டேஷனின் வன அழிப்பு பற்றிய பொய் அம்பலப்படுத்தப்பட்டதுஈஷா பவுண்டேஷன் எந்த வனத்தையும் அழிக்கவில்லை என்று நிரூபிப்பதற்காக, இந்த பிளாக்கில் வெளியான எனது முந்தைய பதிவில் போதுமான வாதங்களை முன்வைத்துள்ளேன்.

பவுண்டேஷன் சார்பாக மிகத் தெளிவான விளக்கம் இந்தப் பக்கத்தில் வெளியாகியுள்ளது: https://isha.sadhguru.org/in/en/blog/article/truth-isha-yoga-center-elephant-corridor

தவறான தகவலைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட  படங்களை முதலில் ஆய்வு செய்யலாம் என்று தீர்மானித்தேன். அப்படங்களில் மிகவும் பரவலாக அறியப்பட்ட படம் கீழே இருக்கிறது:




அந்தப் படத்தின் இடது பக்கம் செழுமையான பச்சையாக இருக்க அதோடு ஒப்பிடப்பட்ட வலது பக்கத்தில் உள்ளவை பழுத்துப் போன /  பழுப்பேறிய பச்சை நிறத்தில் இருக்கின்றன. இதில் ஏதோ ஒரு விஷயம் / சூட்சுமம் பதுங்கி இருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது.  எனவே, கூகுள் எர்த் ப்ரோவைத் தரவிறக்கம் செய்து நானே அந்தப் படங்களைப் பார்த்தேன். கீழே உள்ளது ஈஷா மையத்தை மட்டும் காட்டும் கூகுள் எர்த் ப்ரோ 2006 படமாகும்.


அதனை குற்றம்சாட்டுவோர் ஆதாரமாகத் தந்த படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.



அந்தப் படங்களின் நிறத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலே, ஈஷா மலைகளை அழிக்கிறது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று புரிந்துவிடும். அதற்கு பெரிய அறிவாளி மூளையெல்லாம் தேவையில்லை!

ஈஷா யோக மையத்தினைக் குற்றம்சாட்டும் 2006 படமும் அதற்கு  இணையாக கூகுள் எர்த்தின் உண்மையான படமும் கொடுக்கப்பட்டுள்ளன.




குற்றம் சாட்டும் படத்தில் மலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. பண்ணை நிலங்களும் கூட பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. ஆனால், உண்மையான கூகுள் எர்த் ப்ரோவின் படத்தில் பண்ணை நிலங்கள் அவற்றின் உண்மையான வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. 

2006ன் படம் செழுமையான பச்சையாகத் தெரிகிறது என்றால், பச்சை வண்ண பில்டர் (green filter) முழுப் படத்துக்கும் பயன்படுத்தப்பட்டு அப்படியான தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இதனைத் தவிர வேறு வழியேதும் இல்லை.

இப்படியாக, மிக எளிமையான போட்டோ ஷாப் வேலையைச் செய்து முழு மனித குலத்தையும் ஏமாற்றும் வேலையை யாரே ஒருவர் பார்த்திருக்கிறார் என்பது தெளிவு! மேலும்,  குற்றச்சாட்டுவர்கள் பதிவு செய்துள்ள படத்தில் காட்டியுள்ளது போல 2006 படம் இருக்கவில்லை.


இது 2011ல் ஈஷா யோக மையத்தை மட்டும் காட்டும் படமாகும். அதன்பின், யோகா மையம் அருகே உள்ள இடங்களை விலைக்கு வாங்கி விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை எந்த ஒருவரும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அது சரி. ஆனால், அதில் எங்கே வனப் பகுதி இருக்கிறது?




இப்போது, நாம் ஈஷா யோகா மையத்தைக் காட்டும் 2016 கூகுள் எர்த் ப்ரோ  படத்தை எடுத்துக்கொள்வோம்.




குற்றம் சாட்டுபவர்கள் அளிக்கின்ற 2016 படத்தையும் கூகுள் எர்த் ப்ரோ படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் முன்பு பார்த்த அதே விஷயம் மறுபடியும் வருகிறது.





படங்களின் நிற வேறுபாடுகளைக் கவனியுங்கள். ஈஷா யோகா மையத்தின் இடது பக்கத்தில் உள்ள செழுமையான பச்சை நிறம் குற்றம் சாட்டுபவர்களின் படத்தை வைத்துத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2006ன் உண்மையான படமும், 2016ன் கூகுள் எர்த் ப்ரோ படமும் இவ்வாறு காட்சியளிக்கின்றன:




கவனிக்க வேண்டிய மூன்று அம்சங்கள்:

#1 – செயற்கை கோளிலிருந்து அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தை ஒட்டி அந்தப் படங்கள் இரண்டு வகைப்பட்ட சாயல்களில் தெரிகின்றன.

#2 -  ஈஷா பவுண்டேஷன் வளாம் வலது பக்கத்தில் மட்டுமே விரிவாகியிருக்கிறது. அதாவது, பிரதானமாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன பகுதியில் மட்டுமே விரிவாக்கம் நடந்துள்ளது.

#3 – இந்த இரண்டு உண்மையான படங்களும் ஈஷா யோகா மையத்தின் 2006 – 2016  என்று சொல்லப்படுகின்ற படங்களிலிருந்து வேறுபட்டவை.
 

இந்தப் படங்களைக் கவனமாகப் பாருங்கள். பொய்யான படங்கள் அளிக்கும் விவரங்கள் உங்களை ஏமாற்றுவதை உணருங்கள்.  மரியாதைக்குரிய ஒரு நிறுவனத்தின் நல்ல பெயரைச் சிதைப்பதற்காக இதுபோன்ற போலிப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உணருங்கள்.

'கூகுள் எர்த்' படங்கள் என்று சொல்லப்பட்ட படங்களைப் பதிவிட்டு ஈஷா மையம் வனங்களை அழிக்கிறது என்ற பேச்சை ஆரம்பித்து வைத்தவர், பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்துவிட்டார் என்பதை நான் இதற்கு முன்பே எனது பிளாக் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.  ஈஷா வன அழிப்பில் ஈடுபடவில்லை என்று அவர் ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.





இப்போது நீங்கள் உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள் என்பதால், இந்தப் பதிவைப் பரவலாகக் கொண்டு செல்லுங்கள். எந்த நியாய உணர்ச்சியுமின்றி பொய்களைப் பரப்புபவர்களைத் தடுத்து நிறுத்த இந்தப் பதிவைப் பரப்புங்கள்.


Embed This