Sunday, March 29, 2020

கொரானா வைரசும் மகாசிவராத்திரியும் – திட்டமிட்டு பரப்பப்படும் பொய் வதந்திகள் – உண்மை என்ன?

கடந்த பிப்ரவரி21 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரிக்கும் கொரான வைரஸ் தொற்றுக்கும் ஏதேனும் தொடர்ப்பு இருக்குமா?

இந்தக் கேள்விக்கான விடையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான், ஈஷாவின் மேல் சேற்றை வாரிப் பூசுவதற்கான மற்றுமொரு முயற்சி என்ற உண்மை புரிந்தது.

வைரஸ் தொற்று குறித்த அறிவியல் பூர்வமான உண்மைகள்

இந்த வைரஸ் தொற்று 14 நாட்களுக்குள் பரவும். அப்படியெனில், பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்வில் இந்த கொரானா தொற்று பரவியிருக்கும் எனில், மார்ச் 5 க்குள் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும். தொற்று 14 நாட்களுக்குள் வெளிப்பட்டுவிடும் என்ற நிலையில் மார்ச் 5 வரை இந்தியாவில், எந்தவொரு கொரான தொற்று நோயாளிகள் இருப்பதாக விவரங்கள் இல்லை, அப்படியிருக்க, இந்த வாதம் அடிப்படையிலேயே உண்மையற்றது.


மார்ச் மூன்றாம் வாரத்தில்தான் கொரான தொற்றில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் இந்தியாவில் நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
அதேபோல், மகாசிவராத்திரிக்கு வந்த வெளிநாட்டினருக்கு கொரானா தொற்று இருந்தால், இந்நேரம் ஆசிரமத்திலுள்ள சிலருக்காவது அந்த தொற்று பரவியிருக்கக்கூடும். ஆசிரமத்திலும், அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர் மற்றும் இந்தியர்கள் யாருக்கும் இதுவரை எந்தவொரு தொற்றும் கண்டறியப்படவில்லை. அதில் கலந்துகொண்ட எந்தவொரு முக்கியப் பிரமூகருக்கும் இந்த தொற்று இன்றுவரை கண்டறியப்படவில்லை.
மேற்கூறிய விவரங்களே மகாசிவராத்திரிக்கும் கொரானா தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மிகத்தெளிவாக, அறிவியல் பூர்வமாக உறுதிசெய்துள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை

பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே, சீனா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டிலிருந்து மகாசிவராத்திரிக்கு வருகைதர பதிவு செய்திருந்தவர்களின் வருகைப் பதிவை ரத்து செய்து விட்ட ஈஷா மையம் அவர்கள் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துவிட்டது.
இதுகுறித்த விவரங்களை கீழ்காணும் சுட்டிகளில் காண்க:

எனவே, அந்த நேரத்தில் வைரஸ் தடைசெய்யப்பட்ட இந்த நாட்டு மக்களிடமிருந்து எந்தவொரு தொற்றுநோயும் மகாசிவராத்திரி விழாவின் மூலம் பரவியிருப்பதற்கான சாத்தியம் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.
இதுகுறித்து சீனாவிலுள்ள ஒரு ஈஷா தன்னார்வலரின் உருக்கமான வீடியோ பதிவை பாருங்கள்..


மகாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்வதற்கு மருத்துவ பரிசோதனை முன்நிபந்தனை

மேலும், மகாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டினர் அவர்களிக்கு இருக்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகள்/நோய் குறித்த விவரங்களை குறிப்பிடவும், குறிப்பாக, மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே விழாவில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் முன்நிபந்தனையாகும். இது வெறும் விழா காலத்தில் மட்டும் அல்ல, பிற ஈஷா பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.
அதுமட்டுமின்றி கடந்த மார்ச் 28 ஆம்தேதி அரசு சுகாதாரத்துறையினரால் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் முடிவில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதுகுறித்து தினமணியில் வந்த செய்தியின் விவரம் கீழ்காணும் சுட்டியில்:

எனவே, இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை மக்களிடம் பரப்பி, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையில் ஈஷா மையம் என்ன செயகிறது?


அதேநேரத்தில், ஈஷா தன்னார்வலர்கள் மக்கள் தொண்டாற்ற, மருத்துவர்களுடன் கரம்கோர்க்க வேண்டும் என்று சத்குரு அறிவுறுத்துகிறார். 

தேவைப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கான தேவைக்கு ஆசிரமத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என சத்குரு அறிவித்துள்ளார்.

https://www.livemint.com/news/india/covid-19-impact-isha-yoga-center-suspends-programmes-around-the-world-11584426007694.html


மட்டுமின்றி, ஈஷாவின் அனைத்து நிகழ்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்துள்ள ஈஷா அறக்கட்டளை, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் மருத்துவ பரிசோதனையும் செய்து வருகிறது.மக்கள் பணியில் வழக்கம் போல் தங்களை இணைத்துக்கொண்டு, அரசின் அனைத்து முன்முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் முதல் குரலாக ஈஷா மாறியுள்ள நிலையில், அதனை விரும்பாத வெகுசிலரின் வழக்கமான வெற்றுக் கூச்சலாகத்தான் இத்தகைய பதிவுகள் உள்ளன என்பதை மீண்டும் இத்தகைய பதிவுகள் நிரூபித்துள்ளன.


Sources:








Embed This

Wednesday, September 11, 2019

ஈஷா நிறுவனமும் அதன் சமூகப் பணியும்


மிகச்சிறந்த பல்வேறு சமூகப் பணிகள் ஈஷா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் நான் அறிந்த பாராட்டுதலுக்குரிய சில முயற்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிராம சுகாதார மருத்துவமனை
-  ஈஷாவின் நடமாடும் கிராம சுகாரதார மருத்துவமனையின் மூலம் 20 லட்சம் கிராம மக்களை சென்றடைந்துள்ளனர்  
- நாளொன்றுக்கு சுமார் 60க்கும் மேற்பட்டோர் நடமாடும் கிராம சுகாரதார மருத்துவமனையின் மூலம் பயன் பெறுகின்றனர்

- அரசின் உதவியுடன் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

இயற்கை பேரிடர் மீட்பு
- கடலூரில் சுனாமி தாக்கிய பகுதிகளில் பேரிடர் நிவாரண மீட்பு நடவடிக்கைகள், சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம் ஆகியவற்றிலும் பேரிடர் நிவாரண மீட்பு நடவடிக்கைகள், மற்றும் இன்னபிற

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்   
https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

கிராமப்புர மக்களுக்கான திட்டங்கள்
- கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதார உருவாக்கம்/ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்

- அழிந்து வரும் கிராமப்புர கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஈஷா கிராமோத்சவம்

- கிராமப்புர பகுதிகளில் இலவச யோகா வகுப்புகள்
- ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பலருக்கு இலவச வீடுகள் மற்றும் இன்னபிற…
இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும் https://isha.sadhguru.org/social-outreach/rural-rejuvenation/

பழங்குடியின/மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள்

- பழங்குடியினத்தவரின் திறன் அடிப்படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சிகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல்

- ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின கிராமப்புர மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள்

- பல்வேறு பழங்குடியின  குழந்தைகளுக்கு இலவசக் கல்வி

- பழங்குடியின கிராமப்புர மக்களுக்கு இலவச வீடுகள் மற்றும் கழிப்பிடம் கட்டித்தருதல்

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும் 
bit.ly/IshaTribals

சுற்றுச்சூழலுக்கான திட்டங்கள்

- 30 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு,நடப்பட்டு, அதன் பராமரிப்பு குறித்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

- தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் மரக்கன்றுகள் பராமரிக்கும் 35 க்கும் மேற்பட்ட நர்சரிகள்


இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://www.ishaoutreach.org/en/project-greenhands

இந்திய நதிகளை மீட்க
- 2017 ல் ஈஷா நிறுவனத்தால் நடத்தப்பட்ட நதிகளை மீட்போம் பிரச்சார இயக்கம் இந்திய அளவில் மிக்பெரிய வெற்றியடைந்தது. இந்தியா முழுவதுமுள்ள 16,2 கோடி மக்கள் அந்த இயக்கத்திற்கு தங்கள் ஆதரவினை அளித்தனர்

-  நதிகளை மீட்போம் இயக்கம் அளித்துள்ள கொள்கை வரைவை மாநில நதிநீர் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. 

- இந்த இயக்கத்தின் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வாகரி நதியை மீட்போம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் அம்மாநில அரசின் உதவியுடன் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. 

- நதிகளை மீட்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக காவேரியின் கூக்குரல் என்ற செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  காவிரி நதிப்படுகைகளிலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அந்த நதிப்படுகையில் வேளாண்காடுகளை உருவாக்குது..

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்: 
cauverycalling.org

விவசாயிகளுக்கானத் திட்டங்கள்
- தமிழக விவசாயிகளுக்கு பன்னிரண்டிற்கும் மேற்பட்ட இலவச இயற்கை விவசாயப்
- மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் ஆயிரக்கணக்கான பள்ளி நிறுவனங்களை ஈடுபடுத்தியுள்ளது

இவை குறித்த மிகசமீபத்திய ஊடக செய்தி: 
வெள்ளியங்கிரியில் பதிவு செய்யப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் "Farmers Producers Organisation (FPO) கடந்த நிதியாண்டில் 7,91 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட 100 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.ஈஷா யோகா மையத்தின் வழிகாட்டுதலில் 2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வெள்ளியங்கிரிப் பகுதியிலுள்ள தொண்டியமுத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள தென்னை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கிறது. அந்த விவசாயிகள் பயிரிட்டு விற்பனை செய்யும் தேங்காய்களின் அளவை பொறுத்து விலை கொடுத்து அதனை விற்பனையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இது சந்தைவிலையைவிட குறைவு. 400 விவசாயிகளுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் தற்போது 1063 பேர் உறுப்பினர்களாகியுள்ளனர் என்று வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலுள்ள குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கும் இந்த விவசாயிகளை ஒருங்கிணைப்பதில் கிடைத்துள்ள இந்த வெற்றி மகத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விக்கான திட்டங்கள்
- தமிழகம் மற்றும் ஆந்திராவின் 8000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது
- 1000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த தரமான கல்வி அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை/சுட்டியை க்ளிக் செய்யவும்  https://www.ishaoutreach.org/en/isha-vidhya

இந்திய செய்தி ஊடகங்கள் இத்தகைய நல்ல முயற்சிகளை/திட்டங்கள் குறித்து வெளியிடுவதில்லை. அதேநேரத்தில், ஈஷா நிறுவனம் குறித்து வரும் எந்தவொரு குற்றச்சாட்டையும் உடனே வெளியிடுகின்றன.

ஈஷா நிறுவனம் குறித்த உண்மையை தெரிந்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த கட்டுரையில் நாங்கள் அளித்துள்ள விவரங்களின் மூலம் உண்மையான விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Embed This